லாகூர் குண்டுவெடிப்பில் இந்தியருக்கு தொடர்பு-கூறுகிறது பாக்
இஸ்லாமாபாத்: லாகூரில் நேற்று நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த சதீஷ் ஆனந்த் சுக்லா என்பவரைக் கைது செய்துள்ளதாகவும், அவர்தான் இந்த செயலைச் செய்ததாகவும் பாகிஸ்தான் புது குண்டைப் போட்டுள்ளது.
மும்பை தாக்குல் சம்பவம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது. இந்த நிலையில், புதிய தகவல் ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.
லாகூரில் நேற்று நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்தியர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் புதுக் கதை விட்டுள்ளது. அவர் இந்தியத் தூதரக அலுவலகத்தில் முன்பு வேலை பார்த்தவர் என்றும் அது கூறுகிறது.
லாகூரில் உள்ள அரசு அதிகாரிகள், நீதிபதிகளுக்கான குடியிருப்பு வளாகத்தில் நேற்று காலை 9.20 மணிக்கு கார் குண்டு ஒன்று வெடித்தது. இதில் ஒரு பெண் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகத்தான் சுக்லாவைக் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது. அவர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வேலை பார்த்தவர் என்றும், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்றும் பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது. சுக்லாவை பாகிஸ்தான் உளவுப் படையினர் கைது செய்துள்ளனராம்.
தான்தான் குண்டு வைத்ததாக சுக்லா ஒத்துக் கொண்டுள்ளதாகவும், 3 கூட்டாளிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.












Click it and Unblock the Notifications