திருநெல்வேலிக்கே 'அல்வா'-700 பேருக்கு அபராதம்!
நெல்லை: நெல்லை ரயில் நிலையப் பகுதியில், வெளியூர்பயணிகளிடம் தரம் குறைந்த, போலி அல்வா விற்ற 700 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் அனுமதி பெறாத வியாபாரிகளின் தொல்லைகளும் பெருகி விட்டதாக பயணிகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அப்போது அல்வாவிற்கு பெயர் பெற்ற நெல்லையில் சில பிரபலமான கடைகளின் பெயர்களை சொல்லி தரமற்ற அல்வா விற்பதும் தெரியவந்தது.
இதனால் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நெல்லைக்கு வரும் அனைத்து ரயில்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தினமும் 5க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சிக்குவது வாடிக்கையானது.
இந்த வியாபாரிகளுக்கு கோர்ட்டில் ரூ.300 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் தரமற்ற அல்வா விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த வியாபாரிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் அல்வா வியாபாரிகள் நெல்லையை காலி செய்துவிட்டு விற்பனையை வேறு இடத்திற்கு மாற்றி விட்டனர். இதனால் நெல்லையில் போலி அல்வா விற்பனையில் பயணிகள ஏமாற்றப்படுவது தடுக்கப்பட்டு விட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் நெல்லை ரயில் நிலையத்தில் கொடி கட்டி பறந்த அல்வா விற்பனை முற்றிலும் ஓழிக்கப்பட்டு விட்டது. மேலும் ஜனவரி 2008 முதல் இதுவரை 700 வியாபாரிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டு அபராதமும விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications