இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு-சு.சுவாமி

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அகற்றப்பட வேண்டும். அவர்கள் நாட்டையே சீரழித்துவிட்டனர். பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்க முடியவில்லை.
எனவே இந்த ஆட்சியை அகற்றிவிட்டு தேசபக்தி உள்ள ஒரு கூட்டணியின் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். அதற்கான ஒருங்கிணைப்பு பணிகளில் நான் ஈடுபட்டு வருகிறேன்.
மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும்.
சென்னையில் இன்று நடைபெறும் தமிழீழ அங்கீகார மாநாடு சட்ட விரோதமானது. விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமென்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அப்படியென்றால் அவர் முதலில் கைது செய்ய வேண்டியது அவரது மகள் கனிமொழியைத்தான். அவருடைய சென்னை சங்கமம் நிகழ்ச்சியே புலிகளின் ஆதரவாளர்கள் அடங்கியதுதான்.
மத்தியில் உள்ள ஆட்சியில் இமாலய ஊழல்கள் நடந்துள்ளன. ஸ்பெக்ட்ரம் ஊழலை பொறுத்தவரை ஆதாரங்களை திரட்டி வருகிறேன். அடுத்த ஆட்சி அமையும்போது உறுதியாக நடவடிக்கை இருக்கும்.
திருமங்கலம் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் எனறார்.












Click it and Unblock the Notifications