தலிபான்களைத் தொடர்ந்து உலமாக்களும் பாக். ராணுவத்திற்கு ஆதரவு
இஸ்லாபாத்: இந்தியா போர் தொடுத்தால் நாங்களும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக இருப்போம் என பாகிஸ்தான் உலமாக்கள் சபை தலைவர் முப்தி முனிபூர் ரஹ்மான் கூறியுள்ளார்.
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், பாகிஸ்தான் ராணுவத்திற்கு நாங்கள் ஆதரவு தருவோம். எங்களது ஆயிரக்கணக்கான வீரர்களை இந்தியாவுடன் போர் புரிய அனுப்புவோம் என தலிபான் தீவிரவாதிகள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது உலமாக்கள் சபையும், பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலமாக்கள் சபைத் தலைவர் முப்தி முனிபூர் ரஹ்மான் கூறுகையில், இந்தியா போர் தொடுத்தால் அதற்கு எந்தப் பலனும் இருக்காது. மாறாக, ரத்தக் களறியும், பேரழிவும்தான் அதற்குப் பரிசாக கிடைக்கும்.
இதை எடுத்துக் கூறி இந்தியாவை சர்வதேச சமுதாயமும், ஐ.நா. சபையும் அறிவுறுத்தி அமைதி காக்க கூற வேண்டும்.
தீவிரவாதத்தால் பாகிஸ்தானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து உலமாக்களும் வருகிற நாட்களில் அரசுக்கும், ராணுவத்திற்கும் ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications