புத்தாண்டு: கோயில்கள் முன் மறியல்-இந்து முன்னணி
சென்னை: ஆங்கில புத்தாண்டையொண்டி நள்ளிரவில் கோயில்களை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, திறக்கப்படும் கோயில் கதவுகளை மூடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.
அதன் மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஸ்தவர்களின் புத்தாண்டான ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது ஆகம விதிகளுக்கு மாறானது.
ஆங்கில புத்தாண்டுக்காக அர்த்த ராத்திரியில் கோவிலை திறக்கும் அறநிலையத்துறை நிர்வாகத்தை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
அன்றைய தினம் நடு ராத்திரியில் திறக்கப்படும் கோயில்களுக்கு எதிராக இந்து முன்னணி மறியல் போராட்டம் நடத்தி கோயில்களை இழுத்து மூடும்.
ஆகம விதிமுறைகளை மதிக்காத கோயில் அதிகாரிகள் மீது இந்து முன்னணி வழக்கு தொடுக்கும்.
தங்களது புத்தாண்டை அமைதியாக சர்ச்சுகளிலும், வீடுகளிலும் கொண்டாடும் கிருஸ்தவர்களுக்கு இந்து முன்னணி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும்.
அதற்கு மாறாக குடித்துவிட்டு கும்மாளம் போட்டு சாலையில் செல்லும் பெண்களின் கையை பிடித்து இழுத்து புத்தாண்டு வாழ்த்து சொல்லும் அராஜக கும்பலை இந்து முன்னணி தொண்டர்கள் தடுத்து நிறுத்தும் போராட்டமும் நடைபெறும்.
மானமுள்ள அடிமைத்தனத்தை கடைப்பிடிக்காத தமிழர்கள் தமிழர்களின் புத்தாண்டை மட்டும் கொண்டாட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.
ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications