இலங்கை தமிழர்களை காத்திடுக-கருணாநிதி உருக்கம்

இன்று நடந்த திமுக பொதுக் குழுவில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்துவதற்கு ஏற்கனவே பிரதமர் அளித்த வாக்குறுதிபடி வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை விரைந்து அந்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதாகும்.
இதையடுத்து பொதுக் குழுவில் தன்னை கட்சியின் தலைவராக 10வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இலங்கையில் செத்துக்கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான கடமை நமக்குள்ளது. இலங்கை தமிழர்கள் பச்சைக் குழந்தைகளோடு பரிதாபமான நிலையில் நடுத்தெருவிலே நின்று கொண்டிருக்கிறார்கள்.
அதற்காக வன்முறை வழியிலே, பலாத்கார வழியிலே, நாட்டுக்கு விரோதமான வழியிலே, தேசத்துக்கு பகையான வழியிலே செல்ல நாம் விரும்பவில்லை.
இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவு நாம் ஏற்றுக்கொள்ளும் முடிவாக இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு நாம் விரும்பும் அவசரத்துக்கு வேகமாக முடிவு செய்யாமல் இன்னும் இன்னும் இன்னும் தாமதம் செய்து வருவதால் அதன் ஒவ்வொரு நிமிடமும் அங்கே ஒரு தமிழனின் பிணம் விழுந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த பொதுக் குழுவின் சார்பிலே தெரிவித்துக் கொள்கிறேன்.
இது விஷயமாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முறையிட்ட போது அவர் எங்களுக்கு தந்த வாக்குறுதி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போர் நிறுத்தத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.
அந்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். அந்த வாக்குறுதியை வலியுறுத்தியே இங்கு தீர்மானம் போடப்பட்டுள்ளது. எனவே இந்த பொதுக்குழு தீர்மானத்துக்கு மதிப்பளித்து மத்திய அரசு அதனை நிறைவேற்றி தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறது. அந்த வரிசையில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைக் களையும் சாதனையையும் செய்து முடிக்க வேண்டும்.
அங்கே தமிழர்கள் அன்றாடம் உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுத்து நிறுத்த குறுக்கு வழியில் மத்திய அரசை மிரட்ட நாம் விரும்பவில்லை. என்னுடைய நிலையை, திமுகவின் நிலையை, தமிழக மக்களின் நிலைப்பாட்டை சட்டமன்றத்திலே விளக்கியிருக்கிறேன்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் இளம் தலைவர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பிறகு; மறைவுக்கு முன்பு என்று இரண்டு பிரிவாக பார்க்க வேண்டுமென்று நான் கூறியிருக்கிறேன். இன்றைக்கு இலங்கையிலே தமிழர்கள் போர் காரணமாக இன்னமும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்கள் மனதில் ரணம் ஏற்பட்டிருக்கிறது.
அவர்களுடைய ரணத்தை ஆற்ற வேண்டிய பொறுப்பு, அவர்களுடைய புண்ணுக்கு மருந்து போட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்று நான் உருக்கமான வேண்டுகோளை விடுக்கிறேன்.
இந்தக் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும். இதற்காக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மிக மிக பணிவாகவும், மிக மிக உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.
இதன் பிறகாவது மத்திய அரசு மனம் இறங்கி இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களில் இதனையே முக்கிய தீர்மானமாக கருதி மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
மதுவிலக்கு தீர்மானம்:
முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீ்ர்மானங்களில் மது விலக்கு குறித்த தீர்மானமும் அடக்கம்.
அதன் விவரம்:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள் அண்மையில் முதல்வரை சந்தித்து பேசியதை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு இணங்க தமிழ்நாட்டில் படிப்படியாக முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
தீர்மானங்களை கட்சியின் புதிய பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாசிக்க, பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த கரவொலி ஆதரவுடன் அவை நிறைவேற்றப்பட்டன.
-
அண்ணியாருக்கு அல்வா மாதிரி சீட்டு.. தோழர்களுக்கு வேட்டா? கடுகடு கம்யூனிஸ்ட்கள்! இழுபறியாகும் கூட்டணி -
கருணாநிதி வென்றது எப்படி? நெடுஞ்செழியன் வீழ்ந்தது எப்படி? சூழ்ச்சியா? முயற்சியா? -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
மார்ச் 18க்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. காக்க வைக்கப்படும் திருமாவளவன்.. பின்னணி என்ன? -
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
கலவரத்தைத் தூண்டிய பெரியார் ஊர்வலம்..! ‘சோ’ பற்ற வைத்த நெருப்பு.. 1971 தேர்தலில் சாதித்த திமுக! -
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
பெண்களிடம் தவறாக பேசினேனா? வைரலாகி வரும் ஸ்கிரீன்ஷாட் தொடர்பாக ராஜீவ் காந்தி விளக்கம்! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை!












Click it and Unblock the Notifications