பள்ளி மாணவி பலாத்காரம்-இருவர் கைது!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 2 காமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலையை அடுத்த மேம்பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பெற்றோர் கேரளாவில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
மல்லிகா தனது பாட்டி வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந் நிலையில் மல்லிகா தனது வீட்டு அருகில் உள்ள கடைக்கு இரவு நேரத்தில் தனியாக சென்று வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (25), கோபால் (வயது 24) ஆகியோர் அவரை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மல்லிகா தரப்பில் போளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரையும், கோபாலையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications