விடுதலைப் புலிகளின் படகு அழிப்பு - 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: கடல் புலிகளின் படகை இலங்கை கடற்படை இன்று தாக்கி அழித்தது. இந்த மோதலில் நான்கு கடல் புலிகள் கொல்லப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை, யாழ்ப்பாணம் அருகே உள்ள பிசாசு முனை என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் கடற் பிரிவான கடல் புலிகளின் படகு வருவதை அறிந்து அங்கு கடற்படை கப்பல் விரைந்தது.
விடுதலைப் புலிகளின் படகு மீது கடற்படை வீரர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். படகும் மூழ்கடிக்கப்பட்டது என்று கடற்படை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications