மதுரை மாணவர்கள் சென்னை மெரீனாவில் பலி!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர், சென்னை மெரீனா கடற்கரையில் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (19). இவர் நெல்லையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். திருமங்கலத்தைச் சேர்ந்தவர் நரேந்திரன் (19). இந்த இருவரகும் நண்பர்களோடு சென்னையை சுற்றிப்பார்க்க சென்றனர்.
மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெரிய அலையில் இவர்கள் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தனர்.
மீனவர்கள் அவர்களது உடல்களை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications