'எஸ்.எஸ்.எல்.சி' டாக்டர் கைது!
நெல்லை: நெல்லையில் மேலும் ஒரு போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். இவர் பத்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
போலி டாக்டர்களை கைது செய்ய தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திலும் போலி டாக்டர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 11 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
வர்கள் 8 மற்றும் 10ம் வகுப்பு படித்து விட்டு நோயாளிகளுக்கு ஊசி மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்தது தெரிய வந்தது.
இந்நிலையில் நெல்லையை அடுத்த மானூர் தெற்கு பஜாரை சேர்ந்த பீர்முகைதீன் என்பவர் தனது வீட்டிலேயே கிளினிக் நடத்தி வருவதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மானூர் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.
பீ்ர்முகைதீனிடம் நடத்திய விசாரணயில் 10ம் வகுப்பு படித்துள்ள அவர் கடந்த 10 ஆண்டுகளாக அங்கு கிளினிக் நடத்தி அலோபதி முறையில் சிகிச்சை அளித்து ஊசி போட்டதும் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications