நெல்லை பல்கலை.யில் ஜன 4ல் வேலை வாய்ப்பு முகாம்
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் இளைஞர் நலத்துறையின் வேலைவாய்ப்பு மையம் சார்பில் ஜன 4ம் தேதி நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலை கழக வாளகத்தில் நடைபெறுகிறது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில், கேண்டிட் ஐ.டி சொல்யூசன் லிமிடெட் என்ற பன்னாட்டு கால் சென்டரின் நெல்லை கிளையில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
எந்த துறையிலும் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் உரையாடும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.
நியமனம் பெறுபவர்கள் 4 மாத நன்னடத்தை காலத்தில் பணியாற்றும் போது மாதம் ரூ.4 ஆயிரம் ஊதியமும், ஊக்க ஊதியமும் வழங்கப்படும். அதன்பின் ரூ.5 ஆயிரம் ஊதியம், குழு இன்ஸ்யூரன்ஸ், மருத்துவ வசதிகள் , ஊக்க ஊதியம் ஆகியவை வழங்கப்படுகிறது.
நேர்முக தேர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஜன 4ம் தேதி காலை 9 மணிக்கு தங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, 2 சுய தகவல் பதிவேடு நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு கட்டணம் ரூ.25 செலுத்த வேண்டும்.
குழு விவாதம், எழுத்து தேர்வு, மற்றும் நேர்முக தேர்வு முறையில் தேர்வு செய்யப்படவுள்ளது.
மேலும் தகவல் பெற விரும்புவர்கள் பாளை, சாப்டர் ஹால் வாளகத்தில் உள்ள இளைஞர் நலத்துறை அலுவலகத்தை நேரடியாக அல்லது தொலைபேசி மூலமாகவோ (0462 2573996) தொடர்பு கொள்ளலாம்.