வேலை இழப்புகள் தற்காலிகமானதே-அலுவாலியா
நிருபர்களிடம் அலுவாலியா கூறியதாவது:
இந்தியாவின் பல துறைகளும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பது உண்மைதான். இதுவரை மொத்தம் ரூ.40,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, இந்த பொருளாதார நெருக்கடியால். இதை ஈடுகட்ட ரிசர்வ் வங்கியும் ரூ.20,000 கோடியை ரிலீஸ் செய்துள்ளது, ரொக்க இருப்பு விகித்த்தை மேலும் 50 புள்ளிகள் குறைத்துள்ளதன் மூலம்.
இனி தற்காலிகமாக பணவீக்கம் தொடர்பான நடவடிக்கைகளிலிருந்து கவனத்தைத் திருப்பப் போகிறோம். வளர்ச்சிப் பணிகளில் அதிக அக்கறை காட்டுவது இப்போது அவசியமாகிவிட்டது.
அக்டோபர் தொடங்கி டிசம்பர் இறுதி வரை ரிசர்வ் வங்கி 'ரிலீஸ்' செய்துள்ள தொகை ரூ.3,20,000 கோடி.
நாட்டின் பொருளாதார பின்னடைவைச் சமாளிக்க இன்னும் பல நடவடிக்கைகளை அரசு அடுத்தடுத்து அறிவிக்க உள்ளது. வங்கி வட்டி மட்டும் ரெபோ ரேட்டை மேலும் 100 புள்ளிகள் அடிப்படையில் குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதற்குக் காரணம், அதிக பணப் புழக்கத்தை ஏற்படுத்துவது தான்.
இந்த ஆண்டு முழுவதும் நிறைய வேலை இழப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். ஆனாலும் அவை தற்காலிகமானதே. விரைவில் ஒட்டுமொத்த அமைப்பும் சீரடையும் என்ற நம்பிக்கை உள்ளது , என்றார் அலுவாலியா.
நெடுஞ்தசாலைத் துறைப் பணிகளுக்காக விரைவில் மத்திய அரசு ரூ.25,000 கோடியை ஒதுக்கவுள்ளதாம். இதன்மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் வரி விலக்கு பெற்ற பத்திரங்களை விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது ரிசர்வ் வங்கி. இதன் மூலம் ரூ.75,000 கோடி திரட்டப்பட்டு வளர்ச்சிப் பணிகளுக்கு வழங்கப்படும்.