பிரபாகரன் மறைவிடத்தைத் தேடும் ராணுவம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் எங்கு உள்ளது என்பதை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனால் அவரது இருப்பிடம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
கிளிநொச்சியை ராணுவம் பிடித்து விட்ட நிலையில் அடுத்த குறியாக முல்லைத்தீவை ராணுவம் இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில்,விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் குறித்து ராணுவத்திடம் இதுவரை ஒரு தகவலும் இல்லையாம்.
இதுகுறித்து விடுதலைப் புலிகளுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வரும் பிளாட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறுகையில், பிரபாகரனின் இருப்பிடம் குறித்து ராணுவத்திடம் எந்தத் தகவலும் இல்லை. இன்னும் அவர்களால் பிரபாகரன் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
விடுதலைப் புலிகள் தற்போது பிரபாகரனைக் காப்பாற்றும் நோக்கில்தான் கவனமாக உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
தற்போது முல்லைத்திவில் ஒரு பகுதியும், கிளி நொச்சியில் சிறிய பகுதியும் மட்டுமே புலிகள் வசம் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications