கிளிநொச்சி வீழ்ச்சி: போர் ஓயாது, புலிகளின் உத்தி மாறும் - தலைவர்கள் கருத்து
சென்னை: கிளிநொச்சி வீழ்ந்து விட்டதால் ஈழப் போர் முடிவடைந்து விடாது. விடுதலைப் புலிகள் தங்களது உத்திகளை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள். போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் நேற்று மாலை கைப்பற்றியது.
இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவர்களின் பொதுவான கருத்து, போர்க்களம் மாறி விட்டது. ஆனால் போர் தொடரும். விடுதலைப் புலிகள் தங்களது போர் உத்தியை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள் என தெரிவித்துள்ளனர்.
கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில், கிளிநொச்சி வீழ்ந்து விட்டதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில்தான் செய்திகள் வருகின்றன. அதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்தால்தான் எங்களால் கருத்து சொல்ல முடியும் என்றார்.
தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், கிளிநொச்சியின் வீழ்ச்சியால் போர் முடிந்து விடும் என கூற முடியாது. ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்துள்ளது. ஆனால் புலிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இத்துடன் போர் முடியும் என நான் நினைக்கவில்லை. வேறு மாதிரியான போர் உத்திகளை புலிகள் கடைப்பிடிக்கலாம். போர்க்களங்கள் மாறலாம் என்றார்.
பழ.நெடுமாறன்
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறுகையில், ஏற்கனவே கிளிநொச்சி ஒரு மயான பூமி. அங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. அதை பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளது. இது அவர்களுக்கு பெரிய வெற்றி அல்ல.
போர் இலங்கையை சூழும், வேறு பகுதிகளுக்கும் போர் பரவும் என்றார்.
தமிழர் இயக்கத் தலைவர் தியாகு
தமிழர் இயக்கத் தலைவர் தியாகு கூறுகையில், இது இந்தியாவின் துரோகத்தால் விளைந்தது. போரில் வெற்றிகளும், தோல்விகளும் சகஜம். இது இன்னும் ஒரு நிகழ்வு அவ்வளவுதான். இது அவர்களுக்கு சிறிய பின்னடைவுதான்.
போர்க்களங்களை இழக்கலாம், ஆனால் போரை இழந்து விட்டதாக கூற முடியாது. இந்த வழியில் வெல்ல முடியாவிட்டால் வேறு உத்திகளுக்கு மாறும் திறன் விடுதலைப் புலிகளுக்கு உண்டு. போரில் வெல்ல பல வழிகள் உள்ளன என்றார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications