பாகிஸ்தான்: சரப்ஜித் மரண தண்டனை ரத்தாகிறது
இஸ்லாமாபாத்: உளவு பார்த்ததாக கூறி கைது செய்யபப்பட்டு பாகிஸ்தான் கோர்ட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங்கின் தண்டனையைக் குறைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
லாகூரின் கோட்லோக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சரப்ஜித் சிங். பைசலாபாத் மற்றும் முல்தான் நகரங்களில் நடந்த குண்டுவெடிப்பில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவர் இந்திய உளவாளி என்றும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவருக்கு, கடந்த முஷாரப் ஆட்சியில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போதைய சர்தாரி அரசில், மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சரப்ஜித் சிங்கின் மரண தண்டனையும், ஆயுள்த தண்டையாக குறைக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பரூக் நயீக், உள்துறை அமைச்சகத்திற்கு குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சரப்ஜித் சிங்கின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அவர் பரிந்துரைத்துள்ளார்.
சரப்ஜித் சிங்கின் உயிரைக் காப்பாற்றப் போராடிய ஒரே பாகிஸ்தான் தலைவர் முன்னாள் மனித உரிமைத்துறை அமைச்சர் அன்சார் பர்னிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில், சட்ட அமைச்சகம், சரப்ஜித் சிங்கின் மரண தண்டனையைக் குறைப்பது தொடர்பான குறிபபை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. சரப்ஜித் சிங் தவிர மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் கூட அது ஆயுள் தண்டனையாக மாற்றப்படவுள்ளது.
இந்த குறிப்பை உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டால் உடனடியாக அனைவரின் மரண தண்டனையும் ரத்தாகி, ஆயுள் தண்டனையாக மாறி விடும் என்றார்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications