இன்று இரவு முதல் லாரிகள் ஸ்டிரைக் - தமிழகம் ஸ்தம்பிக்கும்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஸ்டிரைக் தொடங்குகிறது. அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள இந்த ஸ்டிரைக்கால் காஸ் சிலிண்டர் சப்ளை உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
கச்சா எண்ணை விலை சர்வதேச சந்தையில் வெகுவாக குறைந்துள்ள போதிலும், டீசல் விலையை பெருமளவில் குறைக்காமல் உள்ள மத்திய அரசைக் கண்டித்தும், டயர் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும், ரேடியர் டயர் இறக்குமதி மீதான தடையைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற ஸ்டிரைக்குக்கு அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் லாரி ஸ்டிரைக் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழகத்தில் மட்டும் ஒன்னே முக்கால் லட்சம் லாரிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.
டிரெய்லர், டேங்கர்கள், அரைபாடி உள்ளிட்ட அனைத்து வகை லாரிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன.
இதனால், காஸ் சிலிண்டர் சப்ளை உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
தூத்துக்குடியில் ...
லாரிகள் வேலை நிறுத்தத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 5000 லாரிகள் பங்கேற்கின்றன. வேலை நிறுத்தம் நீடித்தால் காய்கறி விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சாமுவேல் கூறுகையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால் மத்திய அரசு கண்துடைப்பாக விலையை லிட்டருக்கு ரூ.2 மட்டும் குறைத்துள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும். அப்போதுதான் லாரி வாடகையை குறைக்க இயலும்.
லாரி வாடகை குறைந்தால் தான் அத்திவாசிய பொருட்களின் விலையும் குறையும். டீசல் விலையை குறைக்க கோரி வரும் 5ம் தேதி முதல் அகில இந்திய அளவில் நடைபெறும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம்.
மாவட்டத்தில் 5 ஆயிரத்து 500 லாரிகள் ஓடாது என்றார் அவர்.
வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பால் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி-இறக்குமதி பணிகள் பாதிக்கப்படும்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications