வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை - மழை
Subscribe to Oneindia Tamil

வட கிழக்குப் பருவ காலம் முடிவடைந்ததாக சமீபத்தில்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கேற்ப மழை சுத்தமாக நின்று கடும் பனி கொட்டி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் நிலைமை மாறியது. குளிர் காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது.
சென்னையில் குற்றாலத்தில் பெய்வதைப் போல சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று தொடங்கிய மழை இன்று காலை வரையிலும் தொடர்ந்து லேசாக பெய்து கொண்டிருக்கிறது.
இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்துள்ளது.
தென் மேற்கு வங்கக் கடலில், இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதால் இந்த திடீர் மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழை இன்றும் நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications