For Daily Alerts
Just In
நந்திகிராம் இடைத் தேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வெற்றி
கொல்கத்தா: சர்ச்சைக்குரிய மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரோசா பீபி வெற்றி பெற்றுள்ளார்.
பெரும் வன்முறையால் ரணகளமான நந்திகிராம் சட்டசபைத் தொகுதிக்கு ஜனவரி 5ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. அத்தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ முகம்மது இலியாஸ் ஊழல் வழக்கில் சிக்கி ராஜினாமா செய்ததால் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பிரோசா பீபி போட்டியிட்டார். இவர் 39,551 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சி இத்தொகுதியை இழந்துள்ளது.
Comments
Story first published: Friday, January 9, 2009, 12:37 [IST]