29 சட்ட மாணவர்களுக்கு ஜாமீன்-நூதன நிபந்தனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சட்டக் கல்லூரி மாணவர் மோதல் தொடர்பாக கைதான 29 சட்ட மாணவர்களுக்கு நூலகம் சென்று புத்தகம் படிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்களிடையே கடும் மோதல் மூண்டது. இதில் 3 பேர் கொலை வெறித்தனமாக தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 29 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சுதந்திரம், சித்திரைச்செல்வன், மணிமாறன் உள்ளிட்ட 29 மாணவர்களுக்கும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி 29 பேரும் நான்கு வாரங்களுக்கு ஒரு பொது நூலகத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2 மணி நேரத்திற்கு ஏதாவது புத்தகத்தைப் படிக்க வேண்டும். பின்னர் அந்தப் புத்தகம் குறித்த அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+