குடியரசு தினம்-குழந்தைகள் யானை சவாரி ரத்து
டெல்லி: குடியரசு தின அணிவகுப்பின்போது தீரச் செயலுக்கான விருது பெற்ற குழந்தைகளை யானை மீது அமர வைத்து அழைத்து வரும் நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.
பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் குழந்தைகளுக்கான யானை சவாரியை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
தீரச் செயல் புரியும் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு வீர விருது அளித்து கெளரவிக்கிறது. இந்த விருது பெற்ற குழந்தைகள் குடியரசு தினத்தன்று நடைபெறும் அணிவகுப்பின்போது யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்படுவர்.
ஆனால் இந்த ஆண்டு பாதுகாப்பு கருதி இந்த யானை சவாரியை ரத்து செய்துள்ளது பாதுகாப்பு அமைச்சகம்.
இதுகுறி்த்து பாதுகாப்புத்துறை தரப்பில் கூறுகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின்போது யானை சவாரி இடம் பெறாது.
அதற்குப் பதிலாக பரம் வீர் சக்ரா விருது பெறுவோர் அழைத்துச் செல்லப்படுவது போல, மாருதி ஜிப்சி வண்டிகளில் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவர்.
ஒவ்வொரு ஜிப்சியிலும் 3 அல்லது நான்கு குழந்தைகள் அமர வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு 20 குழந்தைகள் வீர தீர செயலுக்கான விருதினைப் பெறுகிறார்கள். தமிழகத்தின் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுவன் மருதுபாண்டியனும் அவர்களில் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications