வென்றது திமுகவின் பணம்- குண்டர் படை: ஜெ

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுகவின் பண பலம், குண்டர் படைபலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுகவின் பண பலம், குண்டர் படை பலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன, ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதைத்தான் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு தெளிவாகக் காட்டுகிறது.

7.1.09 அன்று மாலை 5 மணிக்கு மேல் வாக்காளர் அல்லாதவர்கள் தொகுதியில் இருக்கக்கூடாது, தொகுதியை விட்டுவெளியேற வேண்டும் என்பது விதி. ஆனால் திமுக அமைச்சர்கள் மற்றும் அழகிரியின் குண்டர்கள் உள்பட திமுகவினர் அனைவரும் அதன் பின்னரும் தொகுதிக்கு உள்ளேயே வலம் வந்துகொண்டிருந்தனர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை, கட்டுப்பாடு என்பதெல்லாம் எதிர்க் கட்சிகளுக்கு மட்டும்தான் போலும்!.

திமுகவினருக்கு எந்தச் சட்டமும் பொருந்தாது என்ற அளவிற்கு திமுக அமைச்சர்கள் திருமங்கலம் தொகுதிக்குள் 7ம் தேதியன்று மாலை 5 மணிக்குப் பிறகும் பணம், தங்க நாணயம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வீடுவீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

அழகிரியின் அடியாட்களால் வாக்காளர்கள் அனைவரும் மிரட்டப்பட்டு இருக்கின்றனர். இது குறித்து அதிமுக சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதில் இருந்தே காவல்துறை கருணாநிதியின் ஏவல் துறையாகத்தான் இருக்கிறது என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

9ம் தேதி தேர்தல் முடிந்தவுடன் 30,000 முதல் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என அழகிரி அன்றே அறிவித்தது; திருமங்கலம் இடைத்தேர்தல் நல்ல செய்தியைத் தரும் என கருணாநிதி சென்னை சங்கமம் விழாவில் அறிவித்தது; வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே வெற்றி பெற்றுவிட்டதாக திமுகவினர் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட்டது; வெற்றியை பாராட்டி விளம்பரப் பலகைகள் வைத்தது ஆகியவற்றில் இருந்தே இந்த இடைத்தேர்தல் எப்படி நடந்திருக்கும் என்பதை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

கருணாநிதி முதலமைச்சராகவும், அவரது மகன் அழகிரி நிழல் முதலமைச்சராகவும் தமிழ்நாட்டில் இருக்கின்ற வரையிலும் காவல்துறை கருணாநிதி குடும்பத்தின் ஏவல் துறையாக செயல்படும் வரையிலும், தமிழ்நாட்டில் தேர்தல் என்பது சடங்கு, சம்பிரதாயம் போலத்தான்.

தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாடுபட்ட தோழமைக் கட்சியினருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+