சத்யம்: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு
மும்பை: ஒவ்வொரு வணிக வங்கியும் சத்யம் நிறுவனம் தொடர்பாக தங்கள் கிளைகளில் உள்ள கணக்கு விவரங்கள், ஆவணங்களை உடனே ஒப்படைக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
சத்யம் ராஜு கைது செய்யப்பட்டதும், அவரது வீடு அலுவலகங்களில் முழு அளவில் சோதனை மேற்கொண்டனர் பல்வேறு புலனாய்வு அதிகாரிகள். ஆனால் இதில் சத்யம் வங்கிக் கணக்குகள் தொடர்பான எந்த ஆவணமும் கிடைக்கவில்லை.
இவை மாயமாக மறைந்துவிட்டது எப்படி என ஆராய்ந்து கொண்டிருக்காமல், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது ரிசர்வ் வங்கி மூலம்.
இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
"இந்தியாவில் சத்யம் நிறுவனத்தின் கணக்குகள் எந்தெந்த வங்கிகளின் கிளைகளில் இருந்ததோ, அவை அந்தக் கணக்குகளை முழுமையாக உடனே ஒப்படைக்க வேண்டும்.
சத்யம் நிறுவனத்தின் சார்பு நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் வைத்துள்ள வங்கிக் கணக்கு விவரங்களையும் உடனே சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக கொள்ளது.
இதைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சத்யம் சார்பு நிறுவனமான மேடாஸூக்கு தங்கள் வங்கியுள்ள 103 மில்லியன் டாலர்கள் குறித்து முழுமையான தகவல்களைத் தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி போன்றவையும் தங்கள் வசமுள்ள வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிடத் துவங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications