இலங்கையில் போர் நிறுத்தம்: திருமாவளவனின் திடீர் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil

சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு காவல்துறையின் அறிவிப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் திருமாவளவன், தனது கட்சியினர் புடை சூழ உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேசினர்.
இலங்கையி்ல் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும். இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும். தமிழினப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திருமாவளவன் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவம் அவர் அறிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications