யார் பிரதமர்?-மக்களை திசைதிருப்ப முயற்சி-அத்வானி
டெல்லி: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுவது, மக்களை திசை திருப்பும் முயற்சி என அக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் பி்ரதமர் வேட்பாளராக அத்வானி அறிவிக்கப்பட்ட நிலையில் பைரோன் சிங் ஷெகாவத் போர்க் கொடி உயர்த்தினார். தொழிலதிபர்கள் அனில் அம்பானி, சுனில் மிட்டல் ஆகியோர் மோடி பிரதமராக வேண்டும் என குட்டையை குழப்பினர்.
இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய அத்வானி, பாஜகவுக்கு எதிராக சில பத்திரிகைகள் இது போன்ற திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளன. மோடி, குஜராத்தில் சிறந்த முதல்வராகவும், மக்களின் பாதுகாவலராகவும் திகழ்ந்து வருகிறார்.
ஒரு குடும்பத்தின் இளைய உறுப்பினர் இதுவரை நிகழ்த்தாத புதிய சாதனை படைத்தால் அதன்மூலம் கிடைக்கும் பாராட்டு குடும்பத்தினர் அனைவருக்கும் போய் சேரும். இதனால் குடும்பத்தினர் யாரும் கவலைப்பட மாட்டர்கள். இது குடும்பத்துக்கு கிடைத்த பெருமை.
இந்திய அரசியலில் கடந்த 60 ஆண்டுகளில் மோடி அளவுக்கு யாரும் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியையும், மக்கள் ஆதரவையும் பெறவில்லை.
குஜராத் சட்டசபை வெற்றியின் மூலம் ஒரு சிறந்த தலைவர் அவதூறு பிரச்சாரங்களை எப்படி வீரத்துடனும் சமாளிப்பார் என்பதை அனைவருக்கும் மோடி விளக்கியுள்ளார் என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications