திருவாவடுதுறை ஆதினத்தில் ரூ.1,500 கோடி ஊழல்-தம்பிரான்
சென்னை: திருவாவடுதுறை ஆதினத்தில் ரூ.1,500 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக திருமூலர் அருளாட்சி மன்றத்தின் நிறுவனத் தலைவரான முத்துக்குமார் தம்பிரான் சுவாமிகள் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியாவிலேயே மிகவும் தொன்மையான மடம் திருவாவடுதுறை ஆதினம். மடத்துக்கும் அதற்கு சொந்தமான கோவிலுக்கும் சேர்த்து காசி முதல் கன்னியாகுமரி வரை 2.5 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. என்னுடைய குரு அம்பலவாணர் தேசிகர் காலத்தில் இருந்த பல கல்வி நிலையங்கள் இன்று மடத்தில் இல்லை.
ஏழை, எளிய மக்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டு, அதை மற்ற மதத்தினருக்கு மிக அதிக விலைக்கு விற்கிறார்கள். அதற்கு கணக்கு எதுவும் காண்பிப்பதில்லை.
இந்த வகையில் ரூ.1,500 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக, இந்து அறநிலையத்துறை விளக்கம் கேட்டு 6 மாதத்திற்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது.
1984ம் ஆண்டிலிருந்து திருவாவடுதுறை ஆதினமாக பதவி வகித்து வரும் சிவப்பிரகாசம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். எனவே நியாயமான முறையில், மடத்தை கேவலப்படுத்தாமல் அவர் மடாதிபதி பதவியை விட்டு விலக வேண்டும்.
இது தொடர்பாக அரசு குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடருவோம் என்றார் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள்.












Click it and Unblock the Notifications