'புரியாமல்' தடுமாறும் சந்தை!
மும்பை: 58 புள்ளிகள் கூடுதலுடன் துவங்கிய மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் அடுத்த சில மணி நேரங்களில் மைனஸில் தடுமாறத் தொடங்கிவிட்டது.
நிப்டியும் இன்று 17 புள்ளிகள் கூடுதலாகவே துவங்கியது. ஆசிய பங்குச் சந்தைகளில் நிலையான வர்த்தகம் நடப்பதால் இந்திய பங்குச் சந்தைகளிலும் அது எதிரொலிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களில் மீண்டும் சரிவை நோக்கிச் சென்றது சென்செக்ஸ்.
சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் 8 புள்ளிகளை இழந்து மைனஸுக்கு சென்றது.
ரியல் எஸ்டேட் மற்றும் ஐடி பங்குகள் பரிமாற்றத்தில் சுணக்கம் நிலவியது. வேறு நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவு லாபகரமாகவும் விற்பனையாகவில்லை.
இந்த ஏற்ற இறக்கங்களுக்கு பாரக் ஒபாமா பதவி ஏற்பு, ஆசிய பங்குச் சந்தையின் போக்கு, வார இறுதியில் வால் ஸ்ட்ரீட்டில் நடந்த வர்த்தகம்... இப்படி ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!!
பிற்பகல் 12 மணியளவில் சந்தை நிலவரம்: சென்செக்ஸ்: 9329.98 (+6.39), நிப்டி 2842.90 (+14.45)