நெடுஞ்சாலை டெண்டர்கள் எடுக்க ஆளில்லை!
நாடு முழுவதும் ரூ. 70,000 கோடியில் 60 "எக்ஸ்பிரஸ் வே' சாலை அமைப்பதற்கான திட்டங்களை நெடுஞ்சாலைத் துறை அறிவித்தது.
இந்தத் திட்டங்களுக்கு டெண்டர் விடும் பணிகள் 2008க்குள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் இவற்றில் 5 திட்டங்களுக்கு மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்தனர். 9 திட்டங்களை டெண்டர் எடுக்க எந்த ஒப்பந்தக்காரும் முன்வரவில்லை. இதனால் பணியில் மந்தமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த 9 திட்டங்களுக்கு டெண்டருக்கான செலவுத் தொகை அதிகமாக இருப்பதாலும், இப்போது நிலவும் பொருளாதார நெருக்கடியாலும், வங்கிகள் கடன் தர மறுப்பதாலும் டெண்டர்கள் எடுப்பதற்கு ஒப்பந்தக்காரர்கள் ஆர்வமாக இல்லை என்றும் தெரிகிறது.
இதையடுத்து மீண்டும் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. சில திட்டங்களுக்கு கடைசி தேதி 14 நாட்களுக்கு மேல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டங்களை நிறைவேற்றுவதில் மந்தமாக இருப்பதை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அடிப்படை கட்டமைப்பு குழு அதிருப்தி தெரிவித்து, குறைந்த இலக்கை கூட எட்ட முடியாத நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இருப்பதாக குறை கூறியுள்ளது.
டெண்டர் எடுக்க ஒப்பந்தக்காரர்கள் முன் வராததால், தற்போது தொகையை மாற்றியமைப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலித்து வருகிறது.