சீமான், கொளத்தூர் மணி, மணியரசனுக்கு ஜாமீன்
சென்னை: புலிகளை ஆதரித்துப் பேசியதாக கைது செய்யப்பட்ட இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் கடந்த மாதம் 12ம் தேதி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் பேசிய இந்த மூவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகக் கைது செய்யப்பட்டனர்.
19ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள ஜாமீன் கோரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் மனு செய்தனர். ஆனால், கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர்களுக்கு ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் சீமான், பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீன் உத்தரவு கோவை சிறைக்குக் கிடைத்ததும் மூவரும் விடுதலை செய்யப்படுவர்.












Click it and Unblock the Notifications