திருமாவளவனின் தந்தையும் சொந்த ஊரில் உண்ணாவிரதம் வாபஸ்

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: நேற்று காலை முதல் சொந்த ஊரில் உண்ணாவிரதம் இருந்த திருமாவளவனின் தந்தையும், தனது போராட்டத்தை மாலையில் முடித்துக் கொண்டார்.

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் திருமாவளவன். அங்குதான் அவரது தந்தை தொல்காப்பியன், தாயார் பெரியம்மா, தம்பிமார்கள் செங்குட்டுவன், வள்ளுவன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.

திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததால், கிராமத்தினர் சோகத்துடன் இருந்தனர். நேற்று திருமாவளவனின் உடல் நிலை மோசமடைவதாக தகவல் பரவியதும், தந்தை தொல்காப்பியன் காலை முதல் உண்ணாவிரதத்தில் குதித்தார்.

அவருடன் குடும்பத்தினரும், கிராமத்தினரும் திரண்டு வந்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தனர்.

அனைவரும் மாரியம்மன் கோவில் அருகே உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்த நிலையில் மாலையில் திருமாவளவன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதைத் தொடர்ந்து திருமாவளவனின் தந்தை மற்றும் கிராமத்தினர் உண்ணாவிரதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+