பாஜகவிலிருந்து கல்யாண் சிங் விலகல்-மகனுக்கு சமாஜ்வாடி சீட்?

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் கல்யாண் சிங். உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர். அத்வானிக்கும், கல்யாண் சிங்குக்கும் நெடுங்காலமாகவே கடும் உரசல் இருந்து வந்தது.
இந் நிலையில் சமீபத்தில் திடீரென டெல்லியில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை கல்யாண் சிங் சந்தித்து ரகசியப் பேச்சு நடத்தினார். இதற்கு அமர்சிங் ஏற்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து கல்யாண் சிங் பாஜகவிலிருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பாஜகவிலிருந்து விலகி விட்டதாக கல்யாண் சிங் இன்று அறிவித்தார்.
லக்னெளவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜகவில் எனக்கு அவமானமே மிஞ்சியது. அங்கு இருந்த இத்தனை காலமும் மூச்சுத் திணறல் அவஸ்தையை நான் சந்தித்தேன்.
எனக்கு உரிய மரியாதை கொடுக்காத பாஜகவில் இனியும் இருப்பதால் எந்தப் புண்ணியமும் இல்லை. எனவேதான் பாஜக அடிப்படை உறு்பினர் பொறுப்பு முதல் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி விட்டேன்.
எனது ராஜினாமா கடிதத்தை அத்வானிக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
தனிக் கட்சி தொடங்கி நடத்தி வந்த நான் மீண்டும் பாஜகவுக்கு வந்தது மிகப் பெரிய தவறு என்பதை தற்போது உணர்ந்துள்ளேன்.
புதிய கட்சி எதையும் நான் தொடங்கப் போவதில்லை. அதேபோல புதிய கட்சி எதிலும் இணையவும் போவதில்லை என்றார் கல்யாண் சிங்.
இருப்பினும் அவர் சமாஜ்வாடி கட்சியில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், கல்யாண் சிங்கின் மகனுக்கு சமாஜ்வாடி கட்சி லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும் என கூறப்படுகிறது.
பாஜகவுக்கு பின்னடைவு:
கல்யாண் சிங் விலகியுள்ளது உ.பி.யில் பாஜகவுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
உ.பி. மாநிலத்தில் பலம் வாய்ந்த அரசியல் தலைவர்களில் கல்யாண் சிங்கும் ஒருவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர் பாஜகவின் பலம் வாய்ந்த முகமாக விளங்கியவர்.
ஆனால் பாஜகவிலிருந்து பிரிந்து தனிக் கட்சி நடத்தி வந்த அவர் பின்னர் மீண்டும் பாஜகவுக்கு திரும்பியது முதலே, அவருக்கு பழைய மரியாதையும், கெளரவமும் பாஜகவில் கிடைக்கவில்லை என கல்யாண் சிங் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அத்வானிக்கும், கல்யாண் சிங்குக்கும் நாளுக்கு நாள் உரசல் முற்றிக் கொண்டே வந்தது. இந்த நிலையில்தான் சரியான நேரமாக பார்த்து சமாஜ்வாடி வீசிய வலையில் கல்யாண் சிங் விழுந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கல்யாண் சிங்கின் விலகல், லோக்சபா தேர்தலில் உ.பியில், பாஜகவுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவை கொடுக்கும் என்றும் உ.பி. வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி












Click it and Unblock the Notifications