பிரபாகரனை கண்டிப்பாக பிடிப்போம்-இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ கண்டிப்பாக பிடிப்போம் என இலங்கை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கெஹலிய ரம்புகவெல்லா கூறியுள்ளார்.

பிரபாகரன் இலங்கையிலிருந்து தப்பியிருக்கலாம், முல்லைத் தீவில் அவர் இருப்பார் என உறுதியாக கூற முடியாது என அந்நாட்டு ராணுவத் தளபதி பொன்சேகா கூறியிருந்தார். இந் நிலையில் நேற்று பிரபாகரன் இங்குதான் தங்கியிருந்தார் என்று கூறி ஒரு பங்கரின் படத்தை வெளியிட்டது இலங்கை ராணுவம்.

இந் நிலையில், பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்போம் என்று கூறியுள்ளார் ரம்புகெவல்லா. பிரபாகரன் இலங்கையில் இல்லை என பொன்சேகா கூறியுள்ள நிலையில் அதற்கு மாறாக ரம்புகவெல்லா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் கூறுகையில், பிரபாகரன் இலங்கையில்தான் இருக்க வேண்டும். அவர் பங்கர் பங்கராக மாறிக் கொண்டிருக்கிறார்.

நிச்சயம் பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ நாங்கள் பிடித்து விடுவோம் என்கிறார் ரம்புகவெல்லா.

பிரபாகரன் குறித்து இலங்கைத் தரப்புக்கு இன்னும் தெளிவான தகவல் இல்லை என்பதையே இது காட்டுவதாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+