சிவகங்கை மருத்துவக் கல்லூரி-8 ம் தேதி அடிக்கல்!
சிவகங்கை: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கையில் புதிய அரசு மருத்துவ கல்லுரி அமைகிறது. இதற்கு வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார். இந்தக் கல்லூரி அடுத்தாண்டு முதல் செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தின் கோரிக்கையையடுத்து இந்தத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றுகிறது.
இந்தக் கல்லூரிக்கான இடம் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டது. இதை இடத்தை சுகாதாரத்துரை அமைச்சர் பன்னீர்செல்வம், இந்து அறநிலையத் துறை அமைச்சரும் சிவகங்கை மாவட்ட திமுக பிரமுகருமான பெரிய கருப்பன், மாவட்ட கலெக்டர் பங்கஜ் குமார் பன்சல் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்பு பன்னீர்செல்வம் கூறுகையி்ல், சிவகங்கையில் சுமார் 45 ஏக்கர் பரப்பில் மருத்துவக் கல்லூரி கட்ட அரசு ரூ.105 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
வரும் பிப்ரவரி 8ம் தேதி கல்லூரிக்கான அடிக்கல்லை முதல்வர் கருணாநிதி நாட்டுகிறார். கட்டுமானப் பணிகள் உடனடியாக துவக்கப்பட்டு மருத்துவக் கல்லூரி அடுத்தாண்டு முதல் செயல்படும் என்றார்.












Click it and Unblock the Notifications