அலுவலகம் தாக்குதல்: சிபிசிஐடி விசாரணை-சுவாமி
சென்னை: மதுரையில் உள்ள ஜனதாக் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்ரமணியம் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பு தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் கூட்டமைப்பு' ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
விடுதலைப்புலிகளை எதிர்ப்பவர்களையும், மத்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுமட்டுமல்லாமல், தமுக்கம் மைதானம் அருகேயுள்ள தந்தி அலுவலகத்தை நோக்கி தமிழ் வக்கீல்கள் கூட்டமைப்பு புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்றார்கள்.
ஊர்வலத்தில் சென்றவர்கள் எனக்கு எதிராக கோஷமிட்டார்கள். கம்பு, செருப்பு போன்றவற்றுடன் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தவில்லை.
பின்னர் அவர்கள், அப்பகுதியில் உள்ள ஜனதா கட்சி அலுவலகத்தை தாக்கினார்கள். இதில் மாவட்ட ஜனதா கட்சி தலைவர் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது. இதுவரை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆகவே, இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டுமென்று உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்ஷா, பிப்ரவரி 11ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். மேலும், இதுதொடர்பாக பதிலளிக்கும்படி டிஜிபி, சிபிசிஐடி ஐஜி, தல்லாகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications