Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜினாமாவுக்குப் பிறகும் சம்பளம் வாங்கிய எம்எல்ஏ

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செல்வம் அதன் பின்னரும் மாத ஊதியம் பெற்றுள்ளாதாக சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சிக்கு மாறிய செல்வத்துக்கு எம்எல்ஏ பதவியில் தொடரும் தகுதி இல்லை எனக்கூறி அதிமுக எம்எல்ஏ தம்பிதுரை, கடந்த டிசம்பர்16ம் தேதி புகார் அளித்தார்.

அதன்பேரில் எம்எல்ஏ செல்வத்திடம் விளக்கம் கேட்டு டிசம்பர் 17ம் தேதி கடிதம் அனுப்பப்ப்பட்டது. ஆனால், அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. டிசம்பர் 26ம் தேதி அவருக்கு மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பப்பட்டது. அதற்கும் பதில் இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்எல்ஏ மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதால் அவரை நேரில் அழைத்து விசாரிக்க உள்ளேன். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற விஷயங்களில் முடிவெடுக்கும் தனி அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. சட்டசபையில் ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகும் அவர் சட்டமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை பெற்றுள்ளார் என்றார் ஆவுடையப்பன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+