முல்லைத்தீவில் புலிகளின் அலுவலகம் சிக்கியது: ராணுவம்
கொழும்பு: முல்லைத்தீவைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ராணுவம், அப்பகுதியில் உள்ள புலிகளின் அலுவலகம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாம்.
விடுதலைப் புலிகள் வசம் கடைசியாக உள்ள பகுதி முல்லைத்தீவை. இதைப் பிடிக்க 50 ஆயிரம் வீரர்களுடன் அதை முற்றுகையிட்டுள்ளது ராணுவம்.
முல்லைத்தீவுப் பகுதிக்குள் படிப்படியாக முன்னேறி வரும் ராணுவம் அப்பகுதியில் இருந்த விடுதலைப் புலிகளினி் அலுவலகம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய அலுவலகத்தைக் கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த அலுவலகத்தில் பதுங்கு குழிகள் உள்ளனவாம். ஒரு சிறிய அரங்கமும் உள்ளது.
விடுதலைப் புலிகளின் முகாம்கள் குறித்த வரைபடங்களும் ஏராளமாக உள்ளனவாம்.
அங்கு வேறு எந்தப் பொருளும் இல்லை. அத்தனையையும் புலிகள் காலி செய்து எடுத்துச் சென்று விட்டனர் என்று நாணயக்காரா தெரிவித்துள்ளார்.