மன்மோகன் சிங் நலம் பெற உறவினர்கள் பிரார்த்தனை
சண்டிகர்: பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டி அமிர்தசரஸ் பொற்கோவிலில் அவரது உறவினர்கள் மனமுருக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அமிர்தசரஸில் உள்ள தங்கக் கோவிலில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் சுர்ஜித் சிங் கோஹ்லி தலைமையில் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மன்மோகன் சிங்குக்கு அறுவைச் சிகிச்சை முடிந்த பின்னர் அவருடன் நாங்கள் சில நாட்கள் தங்கியிருப்போம்.
அவருக்கு அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
அறுவைச் சிகிச்சை சிறப்பாக நடைபெற வேண்டும் என்று பொற்கோவிலில் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்தோம்.
நமது நாட்டு மக்களும், உலகெங்கும் வாழும் பஞ்சாபி மக்களும், மன்மோகன் சிங் நலம் பெற வேண்டி பிரார்த்திர்த்து வருகின்றனர். இது எங்களுக்கு நிறைவைத் தந்துள்ளது என்றார்.
உள்ளூர் காங்கிரஸாரும் பொற்கோவிலில் சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.