பிரதமரின் கொடும்பாவியை எரிக்க முயற்சி - மாணவர்கள் சஸ்பெண்ட்
திருச்சி: திருச்சியில், பிரதமர் மன்மோகன் சிங் உருவ பொம்மை எரிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் மாணவர் இயக்கங்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முதல் வகுப்பு புறக்கணி்ப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் திருச்சியில் உள்ள ஈவேரா கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் பிரதமர் மன்மோகன்சிங் உருவ பொம்மையை எரிக்க முயன்றுள்ளனர். ஆனால் போலீஸார் அவர்களைத் தடுத்து அவர்களிடம் இருந்த உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர்.
பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற சட்டக் கல்லூரி மாணவர்கள் தியாகராஜன், ராஜேஸ்குமார், பிரகலாதன், திலிப்குமார், சிவக்குமார் ஆகிய 5 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து அந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவி்ட்டுள்ளது.