40 தொகுதிகளையும் வெல்ல எங்களிடம் 4000 கோடி இல்லை: ஆற்காடு வீராசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: 40 லோக்சபா தொகுதிகளையும் வெல்ல எங்களிடம் 4000 கோடி ரூபாயெல்லாம் இல்லை. வேண்டுமானால் அதிமுகவிடம் அந்த வசதி இருக்கலாம் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சட்டசபையில் விவாதம் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் பிச்சாண்டி, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக வெல்லும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன், 40 தொகுதிகளையும் வெல்வோம் என்கிறார் உறுப்பினர். 4000 கோடி ரூபாயை செலவழித்துப் பிடிக்கப் போகிறார்களா என்றார்.
அதற்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுந்து, 4000 கோடி வசதியெல்லாம் திமுகவிடம் இல்லை. வேண்டுமானால் எதிர்க்கட்சியிடம் அந்த திட்டம் இருக்கலாம் என்றார்.
இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.












Click it and Unblock the Notifications