For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்யம்: சம்பளம் தர அரசு உதவி தேவைப்படாது!

By Sridhar L
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: சத்யம் நிறுவன ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்க போதிய நிதி இருப்பதாகவும், அரசின் உதவி கேட்க வேண்டியிருக்காது என்றும் கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் பிரேம் சந்த் குப்தா கூறியுள்ளார்.

இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உண்மையான எண்ணிக்கையை சிஐடி போலீசார் ஆராய்ந்ததில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஊழியர் எண்ணிக்கை போலியானது எனத் தெரிய வந்துள்ளது. அதன்படி 40 ஆயிரத்துக்குள்தான் சத்யம் ஊழியர்கள் உள்ளனர்.

எனவே இவர்களுக்கு இருக்கிற நிதியை வைத்து சம்பளம் கொடுத்துவிட முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதச் சம்பளம் தர ரூ.500 கோடி வரை தேவைப்படும் என்று புதிய இயக்குநர் குழு கூறியுள்ளது. இந்தப் பணத்தை, சத்யம் நிறுவனத்துக்கு அதன் வாடிக்கையாளர்கள் தரவேண்டிய பணத்திலிருந்தே கொடுத்துவிட முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X