சேலம் வக்கீல் வாயில் 'செலோடேப்' ஒட்டி கொடூரக் கொலை
சேலம்: சேலத்தில் வக்கீலை அவரது காரில் வைத்து கொலை செய்த மர்ம கும்பல், அவரது முகத்தில் செலோடேப்பை ஒட்டிச் சென்றது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அம்மாபேட்டை உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டியை வசிப்பவர் வக்கீல் ராஜேந்திரன். 47 வயதான இவர் காண்டிராக்டராகவும் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு தர்சினி என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் செல்வதாக கூறி தனது காரில் மாலை 6.30 மணிக்கு சென்ற அவர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் ஒலி அடித்து கொண்டே இருந்தும், ராஜேந்திரன் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த சுமதி தனது உறவினர்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். கார் எண்ணை குறித்து கொண்ட போலீசார், ராஜேந்திரனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சேலம், கொண்டலாம்பட்டி பை-பாஸ் ரோடு அருகே கார் ஒன்று தனியாக நிற்பதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்டுபிடித்தனர். கார் எண்ணை வைத்து அது வக்கீல் ராஜேந்திரன் ஓட்டி சென்றது என்பது தெரிய வந்தது.
ரோந்து போலீசார் தகவல் கொடுத்தை அடுத்து இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தார்கள். ராஜேந்திரனின் உறவினர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
காரின் கதவுகளை திறக்க உதவும் ரிமோட் இல்லாததை அடுத்து பின்புற கண்ணாடியை உடைத்து கதவு திறக்கப்பட்டது. அப்போது ராஜேந்திரன் இரு இருக்கைகளுக்கு இடையே தலை குப்புற கவிழ்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம கும்பல், பார்சல் கட்ட பயன்படுத்தப்படும் செலோடேப்பை வைத்து அவரது முகத்தை ஓட்டியது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications