டெல்லியில் மதிமுக உண்ணாவிரதம் - 13ம் தேதிக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: டெல்லியில் 12ம் தேதி நடத்துவதாக இருந்த உண்ணாவிரதத்தை 13ம் தேதிக்கு மதிமுக மாற்றியுள்ளது.
இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்த நிறுத்தாமல், இனப்படுகொலைக்குத் துணை போகும் இந்திய அரசைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் பிப்ரவரி 12-ந் தேதி (வியாழக்கிழமை) டெல்லியில் பாராளுமன்றம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த உண்ணாவிரத போராட்டம் 13-ந் தேதி வெள்ளிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications