For Daily Alerts
Just In
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு
கடந்த டிசம்பரில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து மத்திய அரசு பெட்ரோல் விலையில் 5 ரூபாயும், டீசல் விலையில் 2 ரூபாயும் குறைத்தது.
இந்நிலையில் நேற்று ரேபரோலியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு மேலும் குறைக்கலாம் என தெரிவித்தார்.
இதையடுத்து இன்று மாலை நடக்கவிருக்கும் பொருளாதார விவகாரம் குறித்த கேபினட் கூட்டத்தில் விலைகுறைப்பு அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.
பெட்ரோல் விலை 4 ரூபாயும், டீசல் விலை 1 ரூபாயும் குறைக்கப்படும் என தெரிகிறது. இன்று மாலை அறிவிப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Story first published: Wednesday, January 28, 2009, 17:22 [IST]