காவல் அதிகாரிகளுடன் கூடுதல் டிஜிபி நெல்லையில் ஆலோசனை
நெல்லை: தென்மாவட்ட சட்டம் ஓழுங்கு பிரச்சனை குறித்து ஏடிஜிபி ராஜேந்திரன் நெல்லையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தென்மாவட்ட போலீஸ் அதிகாரிகளி்ன் ஆலோசனை கூட்டம் நெல்லை எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. சடடம் ஓழுங்கு ஏடிஜிபி ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
தென்மண்டல ஐஜி சஞ்சிவ் குமார், நெல்லை டிஐஜி கண்ணப்பன், மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கடலோர மாவட்டங்களில் போலீசாரின் கண்காணிப்பை அதிகப்படுத்தவும், சட்டம் ஓழுங்கு தொடர்பாகவும், தீவிரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புள்ளவர்களை கண்காணித்திடவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
சுத்தமல்லியில் 3 பேர் கொலை வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் போன்று வேறு சம்பவங்கள் மற்றும் ஜாதி மோதல்கள் வராமல் தடுக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சுத்தமல்லி சம்பவத்தில் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியதற்கும் டிஐஜி கண்ணப்பன், எஸ்பி ஆஸ்ரா கார்க் ஆகியோரை ஏடிஜிபி ராஜேந்திரன் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications