திருச்செந்தூர் டூ சென்னைக்கு பிப். 8 முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ்
திருச்செந்தூர்: திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை பிப் 8ம் தேதியன்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தொடங்கி வைக்கிறார்.
அன்று காலை டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார் லாலு. பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் செல்லும் அவர் அங்கு பிற்பகலில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு செந்தூர் எக்ஸ்பிரசை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
இவ்விழாவில் ரயில்வே இணை அமைச்சர் வேலு, மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி, எம்பிக்கள், தென்னக ரயில்வே அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
பிப். 8ம் தேதி துவக்க விழா நடப்பதால் அதற்கு முன் ஏற்பாடுகள் தீவிரப்படுத்த மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அணில்சிங்கால், கோட்ட செயலாக்க மேலாயளர் வேலுமணி, கோட்ட பொறியாளர் ராபர்ட் மற்றும் உயர் அதிகாரிகள் இதுகுறித்து திருச்செந்தூரில் இன்று 30ம் தேதி ஆய்வு நடத்துகின்றனர்.
மாலையில் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ராதிகா செல்வியுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
புதிய எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு தடம் எண்-6735, திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தடம் எண்-6736 ஆகியவை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நெல்லை எக்ஸ்பிரஸ் செல்லும் கார்டு லைனில் இயக்கப்பட உள்ளது.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல்












Click it and Unblock the Notifications