இனி இலவச கலர் டி.வி காஸ் அடுப்பு கிடைக்குமா? காங். கேள்வி
சென்னை: தமிழகத்தில் இன்னும் பலருக்கு இலவச கலர் டி.வி, காஸ் அடுப்பு ஆகியவை கிடைக்கவில்லை. அது கிடைக்குமா என காங்கிரஸ் கட்சி சட்டசபை விவாதத்தில் கேள்வி எழுப்பியது.
தமிழக சட்டமன்றத்தில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடந்தது.
அப்போது சேரன்மகாதேவி காங்கிரஸ் எம்எல்ஏ வேல்துரை பேசுகையில்,
எனது தொகுதியில் பாதி இடங்களில் இலவச கலர் டி.வி, காஸ் அடுப்பு வழங்கப்படவில்லை. எதிர் கட்சி உறுப்பினர்கள் இனிமேல் டி.வி வராது, காஸ் வராது என வதந்தியை பரப்புகின்றனர். எவ்வளவு நாளில் அவை கொடுக்கப்படும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் லீமா ரோஸ் பேசுகையில், கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ஏழைகளுக்கு மருத்தவு இன்சூரன்ஸ் திட்டத்திற்கான பிரீமியத்தை, எல்.ஐ.சி., ஜி.ஐ.சி.' ஆகியவற்றில் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழக அரசின் மருத்துவமனைகளில் போதுமான டாக்டர்கள், உயிர்காக்கும் வென்டிலேட்டர்' கருவிகள் இல்லை. திருமண உதவி திட்டத்தின்கீழ், நிதி உதவி மிகவும் தாமதமாகத்தான் கிடைக்கிறது. திருமணமாகி அந்த பெண்களுக்கு குழந்தை பிறந்தபிறகுகூட நிதி கிடைக்காத நிலை உள்ளது.
இதுபோல் கர்ப்பிணி உதவி திட்டம், முதியோர் உதவி திட்டம், விதவை உதவி தொகை திட்டம் ஆகியவற்றை பெறுவதற்கும்
பெண்கள் அலைய வேண்டியதுள்ளது. நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள உள்ளாட்சிகளுக்கு அரசு நிதி உதவி தரவேண்டும் என்றார்.