சென்னை விமான நிலையத்தில் எல்டிடிஇ போராளி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு விடுதலை புலி இயக்கத்தைச் சேர்ந்த போராளி கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு கொழும்பில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த வாலிபர் ஒருவர் பற்றி உளவுத்துறை பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை குடியுரிமை துறை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அதில் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் அவருக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்












Click it and Unblock the Notifications