புலிகளுக்கான 'கெடு' முடிந்ததும் ராணுவம் தாக்கும்: இலங்கை எச்சரிக்கை
கொழும்பு: 48 மணி நேர கெடு முடிந்ததும், ராணுவம் தாக்குதலைத் தொடங்கி விடும் என இலங்கை வெளியுறவு செயலாளர் பலித கொஹனா எச்சரித்துள்ளார்.
அப்பாவித் தமிழர்கள் புலிகளின் பகுதியிலிருந்து விலகி, 'பாதுகாப்பான பகுதி' என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வர இலங்கை அரசு 48 மணி நெர கெடுவை விதித்துள்ளது. இந்தக் கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.
ஆனால் இந்த கெடுவை ஏற்று அரசுப் பகுதிக்கு வர மக்களிடையே முழு ஆதரவு இல்லை. மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான தமிழர்களே இடம் பெயர்ந்துள்ளனர். மற்றவர்கள் வரவில்லை.
இந்த நிலையில், 48 மணி நேர கெடு முடிந்ததும் ராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் என இலங்கை வெளியுறவு அமைச்சர் பலித கொஹனா எச்சரித்துள்ளார்.
இதனால் இரண்டரை லட்சம் தமிழர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. ராணுவம் நடத்தப் போகும் கடும் தாக்குதலில் சிக்கி பெருமளவில் உயிரிப்பு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.
புலிகளின் பங்கர் சிக்கியது
இதற்கிடையே, முல்லைத்தீவு கடலோரப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பங்கர் ஒன்றை ராணுவம் பிடித்துள்ளது.
இந்த பங்கர் அதி நவீனமானதாக இருப்பதாகவும், உள்ளுக்குள் லிப்ட் இருப்பதாகவும், இதை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் ராணுவம் கூறியுள்ளது.
கடந்த சில வாரங்களில் இலங்கைப் படைகள் பிடித்துள்ள 3வது பங்கர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், யாழ்ப்பாணத்தை ஒட்டியுள்ள முல்லைத்தீவு மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளில் ஆழ ஊடுறுவும் படைப் பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் இன்று மாலையில் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து அவர்கள் உள்ளே புகுந்து மீதமுள்ள புலிகளின் பகுதிகளை மீட்பதற்காக அனுப்பப்பட்டு வருகின்றனராம்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications