சென்னை வருகிறது கூகுள் பஸ்
சென்னை: சென்னை மக்களுக்கு இன்டர்நெட்டின் பயன்பாடு குறித்து அதிக விழிப்புணர்வு தரும் வகையில் கூகுள் பஸ் என்ற திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் கூகுள் பஸ் என்ற புதிய திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இத்திட்டத்தை தமிழகத்துக்கு என்றே கூகுள் விசேஷமாக தயாரித்துள்ளது.
இவை இன்னும் இரண்டு மாதத்தில் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. இது தற்போது சென்னை மக்களிடையே 5 சதவீதமாக இருக்கும் இன்டர்நெட் பயன்பாட்டை அதிகரிக்கும். இன்டர்நெட் தொடர்பாக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் என்றும், இது மக்களின் வாழ்க்கை தரத்தை அதிகரிக்கும் முயற்சி எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.
மேலும், இது சென்னையில் உள்ள 600 இன்டர்நெட் மையங்களையும் கண்காணிக்க போலீசுக்கு உதவும். இந்த பஸ்சில் கம்ப்யூட்டர் மற்றும் வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு உள்ளது. தமிழகத்தில் இருக்கும் சிறப்பான ரோடு வசதியை அடுத்து கூகுள் இத்திட்டத்தை சென்னைக்கு கொண்டு வந்துள்ளது.