நவீன் சாவ்லா மீது விரைவில் நடவடிக்கை - பாஜக வலியுறுத்தல்
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியின் பரிந்துரையை ஏற்று, தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை உடனடியாக நீக்க வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி வரும் ஏப்ரல் 20ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். அவருக்கு பின்னர் இப்பொறுப்புக்கு தற்போதைய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாதான் வரவிருக்கிறார்.
இந்நிலையில் கோபால்சாமி நவீன் சாவ்லா பிரிவினைவாதப் போக்குடன் செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டி, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை விரைவில் தீர்க்க வேண்டும். அதற்கு நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
பாஜக செய்திதொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், தேர்தல் ஆணையாளர் ஒருவரை நீக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு தலைமை தேர்தல் ஆணையாளர் கடிதம் எழுதியிருக்கிறார்.
தேர்தல் ஆணையத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சீர்குலைத்துவிடும். அது ஜனநாயகத்துக்கு பெரும் சிக்கலாக அமையும்.
சிபிஐ எதிர்ப்பு
இது குறித்து சிபிஐ தேசிய செயலர் ராஜா கூறுகையில், அடுத்த தலைமை தேர்தல் ஆணையாளராக வரவிருக்கும் நவீன் சாவ்லா நீக்கப்பட வேண்டும் என கோபாலசாமி கூறியுள்ளார்.
பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், இப்படி ஒரு பரிந்துரையை தலைமை தேர்தல் ஆணையர் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன. இதில் உள் நோக்கம் இரு்பபதாக சந்தேகிக்கிறோம்.
தேர்தல் ஆணையத்தின் உரிமை, அதிகாரம், செயல்பாடு ஆகியவை குறித்து பாராளுமன்றத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
சட்ட சிக்கல்கள் - காங்.
கோபாலசாமியின் பரி்ந்துரையில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. முதலில் அவரால் இப்படி ஒரு பரிந்துரையை அனுப்ப முடியுமா, அதற்கான உரிமை அவருக்கு உள்ளதா என்பது சட்ட ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.
தற்போது கோபாலசாமியின் பரிந்துரை மத்திய அரசிடம் அனுப்பப்பட்டுள்ளது. அரசு இதுகுறித்து உரிய முறையி்ல் பரிசீலித்து முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
நான் ஏன் விலக வேண்டும் - சாவ்லா கேள்வி
இதற்கிடையே, நான் ஏன் பதவி விலக வேண்டும் என்று நவீன் சாவ்லா கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது முழுக் கவனமும் பொதுத் தேர்தலை எப்படி நடத்துவது என்பதில்தான் உள்ளது. மற்றவை குறித்து கவனிக்க, கவலைப்பட எனக்கு நேரமில்லை. தலைமைத் தேர்தல் ஆணையரின் கடிதம் குறித்து எனக்குத் தெரியாது என்றார்.
-
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா?












Click it and Unblock the Notifications