இன்று காலை வீடு திரும்பினார் பிரதமர் மன்மோகன் சிங்
டெல்லி: பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இவர் இன்னும் சில வாரங்களில் அலுவலகத்துக்கு வருவார் என தெரிகிறது.
கடந்த 24ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை கொண்ட அவர் டாக்டர்களின் ஆலோசனைகளை சரியாக பின்பற்றியதால், அவரது உடல் நிலை எதிர்பார்த்தைவிட விரைவாக முன்னேறியது.
இதையடுத்து அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்யப்பட்டது. அவர் இன்று காலை வீடு திரும்பினார். அவர் இன்னும் 2 அல்லது 3 வாரம் வீட்டிலேயே ஓய்வு எடுப்பார். அதன் பின்னர் அலுவலகம் சென்று வழக்கமான பணிகளை செய்யலாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications